×

ஆயுதப்படை ஏடிஜிபி ஆஜராக வேண்டும் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பதவி உயர்வு தொடர்பான விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபி, ஐ.ஜி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் பதவி உயர்வு வழங்காதது குறித்து, தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 8 வாரத்தில், உதவி சிறப்பு அதிகாரி பதவி உயர்வு வழங்க கடந்த 2012ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நீதிமன்ற உத்தரவை மதிக்காமலும், பதவி உயர்வு வழங்காமலும் உள்ளது. எனவே இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன் ஆயுதப்படைப்பிரிவின் ஏடிஜிபி முகமது ஷகில் அக்தர்,  ஐ.ஜி ஷைலேஷ்குமார் யாதவ் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன்4ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,Armed Forces AGG , Armed Forces, ADGP, Attendance, Court, Order
× RELATED ஒருவரின் கல்விச் சான்றிதழ் மீது...